ஆன்மீக்ககடலில் பயணிப்பவர்கள்

ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு 2



வளமான வாழ்க்கையை அமைக்க உதவும்   (தம்பதிகளுக்கான) ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் சித்தர்களின் வழித்தோன்றல்களே! இருப்பினும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் தொகையில் வெறும் 10% பேர்களே சகல வசதிகளோடும்,சிறு குறைகூட இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்;மீதி 90%  பேர்கள் பல கோவில்களுக்கு வழிபடச் சென்றாலும்,அவரவர் ஜாதகப்படி செய்ய வேண்டிய பரிகாரங்களை முறையாகச் செய்தாலும்கூட அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை;


அதே சமயம்,நம்மைச் சுற்றியிருப்பவர்களில் பலர் சாதாரண நிலையில் இருந்து எந்த வித  உதவியும் இல்லாமலும்,யாருடைய சப்போர்ட் இல்லாமலும் ஒரே தலைமுறையில் கிடுகிடு வென வளர்ந்துவிடுகின்றனர்;இதற்கான காரணங்கள் அவர்களுக்கே தெரியாது.அந்த காரணங்களை அறியவும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்;

இந்த சூழ்நிலையில் யாருக்குமே தீங்கு தராமலும்,நியாயமாக வாழ்ந்தும் கூட எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படுவதில்லை? என பல ஆண்டுகளாக மனம் வருந்தியிருக்கிறீர்களா?

என் மகன்/மகள் திருமணம் நடைபெறாமலே போவது ஏன்?

எனது பூர்வீகச் சொத்துக்கள் பிரச்னை தீராமலேயே இருக்கிறதே.ஏன்?

எங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை எப்போது பார்ப்போம்?

இந்த அபூர்வமான பிரச்னை தீர எங்கெங்கோ சென்று எவ்வளவோ செலவழித்தும் கூட,பிரச்னை நீங்க வில்லையே? இதுதான் இந்த ஜன்மத்து விதியா?

எங்கள் குடும்பத்து ரத்த உறவுகள் மணமான பின்னர்,ஒற்றுமையின்றி சிதறிப்போய்விட்டனரே!மீண்டும் ஒன்று சேருவார்களா?

எங்கள் மகன்/ளுக்கு மணமாகி இத்தனை ஆண்டுகளாகிய பின்னரும்,குழந்தை பாக்கியம் இல்லையே! ஏன்?

ஜோதிடப்படி,எங்கள் ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளை சரியாக கணித்துச் சொல்கிறார்கள்.ஆனால்,அந்த பிரச்னைகள் தீர எப்படி ஆத்மபலத்தை அதிகரித்து,பிரச்னைகளைத் தீர்க்க வழி சொல்வதில்லை;சொன்னாலும் ஏன் எங்கள் பிரச்னைகள் தீர்வதில்லை!

இதுபோன்ற சிந்தனை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் எனில்,நீங்கள் தான் இந்த ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி வாய்ந்தவர்.


முடிந்தவரையிலும் தம்பதியாக கலந்து கொள்வது அவசியம்;மணமாகாமல் இருப்பவர்களும்,வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி வகுப்பில் கூறப்படும் விஷயங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது;நீங்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபின்னர்,உங்களின் ரத்த உறவுகளுக்கு மட்டுமே போதிக்கலாம்;வேறு எவரிடமும் பகிர்ந்துகொண்டால்,குரு துரோகத்திற்கு ஆளாவீர்கள்.

இந்த பயிற்சி வகுப்பினை  நடத்தித்தர நமது ஆன்மீககுரு ,ஆன்மீகத் தென்றல் திரு.சிவமாரியப்பன் அவர்கள் சம்மதித்துள்ளார்கள்.ஜீன் மாதம் கடைசி வாரத்தில் இந்த வகுப்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற இருக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் 21.6.2012க்குள் தங்களின் பிறந்த ஜாதகம்,போட்டோ,பிறந்த ஊர்,தற்போது வசிக்கும் ஊர், aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்;பிறந்த ஜாதகம் இல்லாதவர்கள் போட்டோவை அனுப்பி வைக்கலாம்.தேர்வு  செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி நடைபெறும் தேதி,இடம்,குருதட்சிணை போன்றவை தனிப்பட்டுத் தெரிவிக்கப்படும்.தகுதியானவர்களை நமது தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

அனுப்பப்படும் மின் அஞ்சலில் subject இல் ஆத்மபலம் வகுப்பு என்பதை தமிழில்/ஆங்கிலத்தில்/தங்கிலீஷில் குறிப்பிட்டு அனுப்பவும்.

தெய்வீக விபூதி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள்,தங்கள் பெயரை முன்பதிவு செய்தாலே போதுமானது;அவர்கள் விபூதி மாணவன் என்று mail subject இல் டைப் செய்து அனுப்பினால் போதுமானது.          கோயம்புத்தூரில் நடைபெற்ற இரண்டாவது தெய்வீக விபூதி  பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளும் இதே போல முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

ஓம்சிவசிவஓம்

ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சிவகுப்பால் கிடைக்கும் நன்மைகள்!!!


ஜீன் மாதம் கடைசிவாரத்தில் ராஜபாளையத்தில் நடைபெற இருக்கும் ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு,அதை தமது வாழ்நாளில் விடாப்பிடியாக நீங்கள் பின்பற்றினால்,பின்வரும் நன்மைகள் உண்டாகும்:

உங்களது இறந்துபோன முன்னோர்களின் ஆசிர்வாதம் முழுமையாகக் கிடைக்கும்.இந்த ஆசிர்வாதம் உங்களின் குடும்பப் பிரசனைகள்,தனி மனித பிரச்னைகள்,நீண்டகால ஏக்கங்கள்,பூர்வீகச் சொத்துப்பிரச்னைகள் ,நீண்டகால உடல்நலக்கோளாறுகளைத் தீர்க்கும்!!!
பல ஆன்மீகப் பயிற்சிகள் செய்தும்,தியானம்,வெவ்வேறு விதமான மந்திர ஜபம்,பலவிதமான தியானங்கள்,யாகங்கள் செய்தும் கூட உங்களது குடும்பத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த ஒற்றுமை/நன்மை/மேன்மை கிடைக்காமல் போயிருக்கலாம்;இந்த பயிற்சியில் கிடைக்க இருக்கும் வழிமுறையைப்பின்பற்றினால்,அந்த ஏக்கங்கள் தீர்ந்துவிடும்.

குல தெய்வ வழிபாடு இன்று பெரும்பாலானவர்கள்(மாநகரங்களில் வசிப்பவர்கள்) செய்வதில்லை;பலருக்கு குல தெய்வமே தெரிவதில்லை;இதனால்,குலதெய்வத்தின் சாபம் உங்களின் வாழ்க்கையை குறையுள்ளதாக மாற்றியிருக்கும்;அந்த குறை நீங்கும்.

மொத்தத்தில் மன நிம்மதியும்,பொருளாதார சுயச்சார்புக்கு வழியும் கிடைத்துவிடும்.
ஓம்சிவசிவஓம்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!


உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில்,நோயின் வளர்ச்சியைத் தடுப்பது மட்டுமே! இதன் மூலமாக பக்கவிளைவுகள் ஏராளமாக உண்டாகின்றன;பெரும்பாலான முதல் பக்கவிளைவு அலோபதி மருத்துவசிகிச்சையால் அல்சர் உண்டாவதுதான்! இதனால்,கடந்த ஒரு நூற்றாண்டாக நமது நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை சில கோடிகளைத் தாண்டும் என்பது கசப்பான நிஜம்!!!

ஆனால்,கடந்த பல நூற்றாண்டுகளாக நமது புராதன மருத்துவமுறைகளான சித்தா,ஆயுர்வேதம்,நியூரோதெரபி போன்றவைகளின் அடிப்படைத்தத்துவம் என்னவெனில்,ஒரு நோய் நமது உடலின் எந்தப்  பகுதியில் செயல்படுகிறதோ,அங்கே சித்த/ஆயுர்வேத மருந்துகள் புகுந்து,நோய்க்குக் காரணமான கிரிமிகளை அழித்து வெளியேற்றுவதும்,அப்படி வெளியேற்றியபின்னர்,அந்த உடல் உறுப்பின் உயிர்த்தன்மையை வலிமைப்படுத்துவதும் ஆகும்.இப்படி செயல்படுவதற்கு குறைந்த பட்சமாக 6 மாதமும்;அதிகபட்சமாக 3 ஆண்டுகளும் ஆகும்.அதன்பிறகு அந்த நோய் திரும்பவும் வருவதில்லை;


சித்த,ஆயுர்வேத மருத்துவம் இந்திய மூலிகைகளின் மூலமாக வளர்ந்தது;புராதன சித்தர்களும்,ரிஷிகளும் இந்த மருத்துவமுறைகளில் மிகச்  சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்.சரி,மூலிகை என்றால் என்ன?


எந்த ஒரு தாவரம் மனிதனின் குறிப்பிட்ட ஒரு அல்லது சில நோயை குணப்படுத்துகிறதோ அது மூலிகை எனப்படும்.மனிதனின் நோயை குணப்படுத்துவது அந்த தாவரத்தின் கனியாக இருக்கலாம்;காய்,இலை,தண்டு,வேர்,மரப்பட்டை மற்றும் முளைக்கும் திறனுள்ள இணுக்காக இருந்தாலும் அது  மூலிகை என்றே அழைக்கப்படுகிறது.கடவுள் மனிதனுக்கு ஒரு முக்கிய உதவியை இந்த மூலிகை விஷயத்தில் செய்துள்ளார்.அது என்னவெனில்,மனிதனின் எந்த உடலுறுப்பு நோயால் பாதிக்கப்படுமோ,அதே உடலுறுப்பின் வடிவில் அந்த மூலிகையின் குணப்படுத்தும் பகுதி (இலை/மடல்/பழம்) இருக்கும்.இது கடவுளின் ஆசிர்வாதம் என்றே சொல்ல வேண்டும்.உதாரணமாக நிலவேம்பு அளவற்ற கசப்புத்தன்மையைக் கொண்டது.இதன் மறுபெயர் சிறியாநங்கை ஆகும்.இதன் இலை நமது உடலில் இருக்கும் கணையம் போலவே இருக்கும்;நாம் உண்ணும் உணவினை குளுக்கோஸாக மாற்றும் பணியைச் செய்வது கணையம் ஆகும்.இப்படி குளுகோஸாக மாற்றும் விகிதம் குறைந்தாலும்,அதிகரித்தாலும் அது சர்க்கரை நோயாக மாறிவிடும்.இந்த விகிதத்தை ஒரே மாதிரியாக வைத்திருக்க கணையத்தைத் தூண்டுவது சிறியாநங்கை (நிலவேம்பு)ஆகும்.


அதேபோல,வல்லாரை இலை மனித மூளையின் பக்கவாட்டுவடிவத்தில் இருக்கும்;இது நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
உலகில் பகல் 12 மணி நேரம்,இரவு 12 மணி நேரம் என சமமாக கால அளவு இருக்கும் ஒரே நாடு நமது இந்தியா மட்டுமே!உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இந்த காலநிலைச் சமநிலை கிடையாது.அதனாலேயே உலகநாடுகளில் வேறு எங்குமே இல்லாத அதிசயங்கள் நமது இந்தியாவில் உண்டு.ஆமாம்!இதானலேயே இந்தியாவில் 35,000 மூலிகை இனங்கள் விளைகின்றன.இவற்றில் வெறும் 6000 மூலிகைகள் மட்டுமே மனிதனால் பயிரிட்டு விளைவிக்க முடியும்.



மூலிகைகளைப் பொருத்தவரையிலும் குமரி மாவட்ட வனப்பகுதி,சதுரகிரி வனப்பகுதி,சபரிமலை வனப்பகுதி,கேரளா மாநிலம்,ஜம்மு & காஷ்மீர்,பீகாரின் சுந்தரவனக்காடுகள்,வங்காளத்தின் கங்கைக்கழிமுகப்பகுதி, சேலம்பகுதியில் உள்ள கொல்லிமலைப்பகுதி, இமயமலைக்காடுகள்,ம.பி.யில் இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கு,நர்மதை நதியோரத்துப் பகுதிகள்,விந்திய சாத்பூரா மலைப்பகுதிகள்,அஸ்ஸாமின் உள்ளடங்கிய பகுதி என நாடு நெடுக மூலிகை வனங்கள் இருக்கின்றன.
சில மூலிகைகளின் பெயர்களை அறிந்துகொள்வோமே!


துளசி,பேய்த்துளசி,நாய்த்துளசி,கருந்துளசி,முப்பிரண்டை,புடலை,பேய்ப்புடலை,கற்றாழை,சிகப்புக்கற்றாழை,சீனித்துளசி,        கருநொச்சி,சிறுகற்றாழை,சிறு ஆவரை,மூக்கண சாரணை,பால்குழை,கருவேப்பிலை,சிறுகுறிஞ்சான்,தான்றிக்காய்,ஜாதிக்காய்,நிலவேம்பு,தூதுவளை,தாளிசப்பத்திரி,செம்பருத்தி,     கடுக்காய்,மாசிக்காய்,நெல்லி,பெருநெல்லி,கருநெல்லி,வில்வம்,    மஹாவில்வம்,செவ்வாழை,பீநாறிச்சங்கு,நன்னாரி,மதனகாமப்பூ, தண்ணீர்விட்டான்கிழங்கு,சேவல்கொண்டைப்பூ,அவுரி,       பேய்க்கரும்பு,வசம்பு,சித்தரத்தை,காட்டுப்பலா,சதாவரி,       கருதோஷநிவாரணி,அதிமதுரம்,சதாவரி,இலந்தைப்பழம்,     ஜவ்வாது,கீழாநெல்லி,இந்துப்பு,ஊமத்தை,வேம்பு,அமுக்கரா,    கண்வலிக்கிழங்கு,நீர்முள்ளிசமூலம்,வல்லாரை,ஆவாரம்பூ,       அருகம்புல்,ஓமம்,வாசனைப்புல்,நெட்டிலிங்கம்,இஞ்சி,காட்டு இஞ்சி,தாமரை,ரோஜா,ஏலக்காய்,ஜாதிப்பத்திரி,பூமிசர்க்கரைக்     கிழங்கு,கண்டங்கத்திரி,ஆடுதொடா,சுக்கு,இசப்பாகுல்,       கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி,சீந்தல்கொடி,வெந்தயம்,நாவல்,நெருஞ்சில்,     கல்யாணமுருங்கைஇலை,மூக்கடலை,பூனைக்காலிவிதை,    குங்குமப்பூ,பொன்னாங்கண்ணி,சர்க்கரைக்கொல்லி,பாகற்காய்,     நாய்ப்பாலை,மருதம்பட்டை,மிளகு,வால்மிளகு,திப்பிலி,சீரகம், கருஞ்சீரகம்,கடுகரோகிணி,சீமைநிலவேம்பு,அசோகப்பட்டை,லோத்திரப்பட்டை,மூசாம்பரம்,திரிபலா,திரிகடுகு,சிவதை,      காட்டுச்சீரகம்,வாய்விடங்கம்,ஆமணக்கு,புதினா,மருதாணி,    கிராம்பு,வெட்டிவேர்,கிச்சிலிக்கிழங்கு,சித்தரத்தை,           குப்பைமேனி,நீலபுஷ்பம்,முடக்கற்றான்,செவ்வல்லிக்கொடி,   குக்குழு,தகரை,கருசிவத்தை,சிறுநெருஞ்சில்,சிறுபீளை,     பெருநன்னாரி,மாவிலங்கப்பட்டை,ஆதாளை,கண்ணுப்பிள்ளை,வசாலை,விருந்தமாலை.


இவை அனைத்தும் நமது நாட்டின் மரபுச்செல்வங்கள் ஆகும்.இந்த மூலிகைகளின் மருத்துவகுணங்களால் நமது நாட்டில் சுமார் 25,000 ஆண்டுகளாக சித்தமருத்துவமும்,ஆயுர்வேத மருத்துவமும் முழுமையான ஆரோக்கியத்தை மனித குலத்துக்குத் தந்துவருகின்றன.வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்,தனது ஆளுகைக்குள் இந்தியாவைக்கொண்டு வந்ததும்,தனது அரசியல் செல்வாக்கினால் சித்த,ஆயுர்வேத மருத்துவத்தை நசுக்கிவிட்டு,அந்த இடத்துக்கு தமது மருத்துவமான அலோபதி மருத்துவமுறையைக்கொண்டுவந்துவிட்டனர்.


உலகமயமாக்கலுக்குப் பின்னர்,பயோடெக் நிறுவனங்களும்,மருந்து நிறுவனங்களும் இந்தியாவிலேயே கால்பதிக்கத் துவங்கியிருக்கின்றன.இவைகள் இந்திய மூலிகைகளை தமது அலோபதி மருந்துகளுடன் கலந்து விற்கத்துவங்கியுள்ளனர்.மறுபுறம்,மூலிகைகளைப் பற்றிய ஆய்வுகள் 1970களிலிருந்து இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆய்வுமுடிவுகளால்,இந்திய மூலிகைகளுக்கு பன்னாட்டுச் சந்தை உருவாகியிருக்கிறது.இன்று அமுக்கராக்கிழங்கு,சீந்தல்கொடி போன்றவைகள் கலந்த மூலிகை மருந்துகள் மருந்தே உணவு,உணவே மருந்து என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.இவைகள் அலோபதி மருந்துகளை விட பல மடங்கு விலைகுறைவாகவும்,குணப்படுத்தும் வேகம் பல மடங்கு அதிகமாகவும் இருப்பதால்,இவைகளுக்கான சர்வதேசச் சந்தை தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருக்கின்றன.



மூலிகைகளை அப்படியே வெளிநாட்டுக்கு அனுப்பி லாபம் சம்பாதிப்பது குறைந்துகொண்டே வருகிறது;மாறாக,அவைகளை மதிப்பூட்டப்பட்ட(Value added) பொருட்களாக்கி விற்பனை செய்வதால்,இந்திய மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்று பன்னாட்டு நிறுவனங்களாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன.மூலிகைகளைக் கொண்டு மூலிகைப் பல்பொடி,மூலிகை உணவுகள்,மூலிகை நொறுக்குத் தீனிகள்(Snacks & Confectionary),மூலிகை எண்ணெய்,மூலிகை வயாக்ரா,மூலிகை வாசனை திரவியம்,மூலிகை குளிர்பானம்,மூலிகை தைலங்கள் என்று தயார் செய்து விற்பனை செய்வோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துவருகிறது.இவ்வாறு தயார் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளைச் சொல்லித் தருகின்றன.

ஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா காங்கிரஸ்


ஷீர்டி சாய்பாபாவின் பக்தர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவிலும்,உலகம் எங்கும் இருக்கிறார்கள்.இவருக்கு இவரது பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கை மட்டும் ரூ.500,00,00,000/- வரை இருக்கிறது.இந்த காணிக்கைகளை ஷீர்டி சாயி சம்ஸ்தான் என்ற அமைப்பின் பொறுப்பில் இருக்கிறது.இது தவிர,அமைப்பின் கட்டிடங்கள்,விவசாய நிலங்கள் வகையில் சேர்த்தால் சம்ஸ்தானிடம் உள்ள சொத்து மதிப்பு ரூ.1000,00,00,000/-வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கணிசமான சொத்து,மஹாராஷ்டிராவை ஆளும் சோனியா காங்கிரஸ் பிரமுகர்களுக்கு  நாவில் நீர் ஊறச் செய்திருக்கிறது.2004 இல் ஷீரடி தலத்துக்கு என தனிச் சட்டத்தை இயற்றினார்கள்.தனி அதிகாரி நியமனத்தின் மூலம் இந்த ஷீர்டி சாயி சம்ஸ்தானின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கில்,சம்ஸ்தானத்தின் நிர்வாகக் குழுவில் காங்கிரஸ் பெரும்புள்ளிகள் நுழைந்தனர்.இந்த சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.சோனியா  காங்கிரஸீம்,பவார் காங்கிரஸீம் ஆளுக்கு 8 என்று பங்கு போட்டுக்கொண்டனர்.இந்த ஷீரடி சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 2007 ஆகஸ்டில் முடிவடைந்தது.


ஆனால்,அதிகார துஷ்பிரயோகம் மூலமாக உறுப்பினர்கள் இன்று வரை பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஷீர்டி வாழ் பக்தர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கினால் இந்த கூட்டுக்கொள்ளை விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.


நன்றி:விஜயபாரதம்,பக்கம 24;வெளியீடு 1.6.12

உணவுப்பாதுகாப்புச்சட்டமா? வறுமையைக்கொண்டு வரும் சட்டமா?



உணவு உற்பத்தி நிறுவனங்கள், உணவு விடுதிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள், நடைமுறைக்கு ஒவ்வாது என்பதே சிறிய, நடுத்தர வணிகர்களின் கருத்து. பன்னாட்டு நிறுவனங்களை வளர்க்கவும், சிறிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகளை படிப்படியாக ஒழித்து விடவும் தான் இந்த விதிமுறைகள் பயன்படும் என்கின்றனர் வணிகர்கள்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்தது. 
இந்த விதிமுறைகள், ஒழுங்குமுறைகளை உணவு பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ளது.ஆணையம் வகுத்துள்ள பல விதிமுறைகள் தங்களை பாதிப்பதாக உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய, நடுத்தர வணிகர்கள் கூறுகின்றனர். 
முக்கிய விதிமுறைகள்:*சிறிய அளவில் உணவு உற்பத்தி செய்பவர்கள் கூட, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்து பதிவு செய்ய வேண்டும். உரிமம் பெற வேண்டும்.
*உணவு உற்பத்தியை கண்காணிக்க தொழில்நுட்ப அறிவு பெற்றவரை, அந்த நிறுவனம் நியமிக்க வேண்டும். அவர் குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
*உணவு உற்பத்தி செய்யும் இடத்திலேயே, உணவுப் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு பரிசோதனைக் கூடம் இருக்க வேண்டும். அல்லது ஆணையம் அறிவிக்கும் சோதனைக் கூடங்களில் உணவுப் பொருட்களை பரிசோதிக்க வேண்டும்.
*உணவுப் பொருட்களைத் தயாரித்து பொட்டலம் போட்டு அளிக்கப்படுவனவற்றில், லேபிள் ஒட்டி கொடுக்க வேண்டும். உணவுப் பொருளில் அடங்கியுள்ள புரோட்டீன், தாதுச் சத்து, ஊட்டச் சத்து அளவை, அந்த லேபிளில் குறிப்பிட வேண்டும்.
*உரிமத்தில் கூறப்பட்டுள்ள உணவுப் பொருளைத் தவிர வேறு எதையும் தயாரிக்கக் கூடாது. பொருளில் மாற்றம், உட்பொருளில் மாற்றம் செய்தால், அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
பொருந்தாது:
 நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என மத்திய அரசு தரப்பில் கூறினாலும், இதனால் பாரம்பரிய உணவு 
உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரும்பாதிப்பு வரும் என்கின்றனர்.உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டமானது, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குப் பொருந்தாது.நேரடியாக விவசாயிகள், மீனவர்களிடம் இருந்து மூலப் பொருட்களை வாங்கும்போது, அவைகளைப் பரிசோதிக்க இயலாது. வெவ்வேறு பருவங்களில் விளையும் விளைபொருட்கள், வெவ்வேறு விதத்தில் இருக்கும். ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துக்கு உட்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியாது.கலப்படமற்ற, சுத்தமான, சுகாதாரமான உணவுகளை பொது மக்களுக்கு வழங்க, வணிகர்களும் கடமைப்பட்டுள்ளனர்.அபராதம்:ஆணையத்தின் விதிமுறைகள் பற்றி, ஐகோர்ட் வழக்கறிஞர் ஜி.சங்கரன் கூறும்போது, "சிறு, சிறு வணிகர்கள், உரிமம் அல்லது பதிவு பெறவில்லை என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
உணவுப் பொருளை மாற்றி விற்பனை செய்தால், பேக்கிங் மற்றும் லேபிள் இல்லாமல் விற்பனை செய்தால் அபராதம் என கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து கலந்த விளைப் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் தான் அதற்கு பொறுப்பு என விதிமுறைகள் கூறுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் நல்லது தான். அதை அமல்படுத்துவதற்காககொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைகள் சரியல்ல' என்றார்.
கையேந்தி பவன் நிலை:ஓட்டல் உரிமை யாளர்கள் பேட்டி:உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து, சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் கே.டி.சீனிவாச ராஜா கூறியதாவது:இந்தச் சட்டத்தினால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய ஓட்டல்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடற்கரையில் சுண்டல் விற்கும் சுடலையும், சுடச்சுட ஆவிபறக்க இட்லி அவித்து விற்கும் கையேந்தி பவன் முனியாண்டியும் மட்டுமல்ல, அனைத்து ஓட்டல்களின் உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கட்டணம் அதிகம்:ஓட்டலுக்கான உரிமம் புதுப்பிக்க முன்பு 500 ரூபாய் செலவு செய்தோம். புதிய விதிமுறைகளின்படி பார்த்தால் ஆண்டுக்கு 2
ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காபியில் கலப்படம் : காபி தயாரித்தால் அதில் எத்தனை சதவீதம் சிக்கரி கலந்துள்ளது, எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, எந்த விகிதாசாரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. காபி தூள் நிறுவனத்திலிருந்து தயாரித்து வரும் தூளில் எதாவது கலப்படம் சேர்ந்து விட்டால் நாங்கள் தான் பொறுப்பு என்கிறது சட்டம்.எண்ணெயில் கலப்படம் இருந்தாலோ அல்லது பூச்சி மருந்துகள் அதிகமாக அடித்த காய்கறிகளை நாங்கள் சமைத்தால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு தான் தண்டனை என்கிறது சட்டம். இதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவர் வீட்டுக்கு செல்லும்போது ஏதாவது ஒரு பிரச்னையின் காரணமாக விபத்து நேரிட்டால் உடனே அவரது மரணத்திற்கு நஷ்ட ஈடாக அபராதமும், தண்டனையும் விதிக்கலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறையில் சாத்தியமா? உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களில் "கேட்டரிங்' படித்தவர் ஒருவர் இடம் பெற வேண்டும். ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை நடத்த வேண்டும். அந்த பரிசோதனையை மேற்கொண்டால் குறைந்தப்பட்சம் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை ஊழியர்களுக்கு நிர்வாகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க சட்டத்தின் வடிவம்:தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் செயலர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் சட்டத்தை அப்படியே காப்பி அடித்து, அதன் வடிவமாக இங்கு உருவாக்கியுள்ளனர்.இந்தச் சட்டத்தை வரவேற்கிறோம். சட்டத்தை அமல்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் தான் சரியல்ல. தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுத்தால் வியாபாரம் நடக்கும். நமது நாட்டின் யதார்த்தமான நிலைமைக்கும், விளை பொருட்களின் தரம், தண்ணீரின் தன்மை, இதையெல்லாம் கருத்தில் கொண்டு விதிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். உணவு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, வழிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர் 4.6.12

மனவளக்கலையால் மதுவைத் துறந்த தமிழ்நாட்டு கிராமம்

மதுபான விற்பனை மூலம் 20 ஆயிரம் கோடி ரூபா# வருவாய் இலக்கு வைத்து தமிழக அரசு சுறுசுறுப்பாகச் செயல்படும் அதே வேளையில், அஜ்ஜிப்பட்டி கிராம மக்கள், யோகா பயிற்சி மூலம் குடிக்கு அடிமையானவர்களை திருத்தி, நல்வழிப்படுத்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதனால், அந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் அறவே குறைந்து உள்ளதாக, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜருகு ஊராட்சியில், அஜ்ஜிப்பட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 800 வீடுகளில் கிட்டத்தட்ட 1,200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர், அரசு பள்ளி வளாகத்தில் தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, குடிமையங்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மாமிசம் ஊர் கட்டுப்பாட்டின்படி, தடை செய்யப்பட்டு உள்ளது.

முதல் அச்சாரம்:இந்த யோகா புரட்சியைத் தொடங்கி வைத்தவர், அஜ்ஜிப்பட்டியை சேர்ந்த, போலீஸ் குற்றப்பரிவு, சப் இன்ஸ்பெக்டர், வெங்கடேஷ். தன் சொந்த பிரச்னைகளைச் சமாளிக்க யோகாவை நாடியவர், அதன் பயனை அனுபவித்த பின், அதை பரப்பத் துவங்கினார்.

இது குறித்து, அவர் கூறுகையில், ""நான் தர்மபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்தபோது, தினம்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் புகார் கொடுக்க வந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. என்னுடன் பிறந்தோர் குடும்பங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் எனக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும்,'' என்றார்.

மேலும், ""இதைத் தவிர்க்க, ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்தில், யோகா பயிற்சி பெற்று , அதை பின்பற்ற ஆரம்பித்தேன். அதனால், மனதளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் இதையே என் குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டேன். என் உறவினர்களிடம் யோகாவின் அவசியத்தை உணர்த்தினேன். அங்கும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இன்று எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது, ஊரே யோகா மூலமாக நல்வழியில் நிமிர்ந்து நிற்கிறது,'' என்றார்.

காலை எழுந்ததும்...:அஜ்ஜிப்பட்டியில், யோகா, வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி உள்ளது. அதன் பயனை அனுபவிக்கும் மக்களும், இடையறாது பயிற்சி செய்து, அறவாழ்வை பராமரித்து வருகின்றனர்.இங்கு உள்ள அனைத்து வீடுகளின் முகப்பிலும் யோகா குறித்த வாசக அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கிறன. புதிதாக எந்த மனிதரை எதிர்கொண்டாலும், வணக்கத்திற்கு பதில், "வாழ்க வளமுடன்' என்ற வாசகம் வாழ்த்துகிறது.இங்கு எவரிடமும், எதற்கும் பதட்டமில்லை, எந்த அவசரமும் இல்லை. எல்லாவற்றையும் பொறுமையாகவும் நேர்த்தியாகவும் செயல்படுத்துகின்றனர். அதிகாலை நான்கு மணிக்கு, இங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் கூடும் மக்கள், காலை ஆறு மணி வரை மொத்தமாக யோகாசன பயிற்சி செய்கின்றனர். பின்னர் தான், கூலி வேலைக்கு செல்வது, காட்டு வேலைகளை பார்ப்பது என, தங்களின் அன்றாடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.வேலையை முடித்துவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்த பின்னர் சிறிது ஓய்வெடுத்து விட்டு, மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை யோகா பயிற்சி செய்கின்றனர், பின்னர் ஒன்பது மணிக்கு தூங்கச் செல்கின்றனர். இப்படியாக இவர்களின் அன்றாட வாழ்வு அமைந்து உள்ளது.

திருந்திய குடிகாரர்கள்:இங்கு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளனர். முதலில், இவர்களில் ஐந்து பேரை தேர்வு செய்து, யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு மாற்றம் ஏற்பட்டு, குடியை விட்டவர்கள், இன்று அதன் வாடை வந்தாலே காததூரம் ஓடுகின்றனர். அப்படி திருந்தியவர்களில் ஒருவர் வடிவேலு, 74. 

அந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், 
""விவரம் தெரியாத 14 வயதிலிருந்து குடித்து வந்தேன். யோகா பயிற்சிக்கு ஐந்து நாட்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பிச்சாங்க. இப்ப அந்த கருமத்தோட நாத்தம் வந்தாலே அந்த இடத்தில் நிக்க மாட்டேன்,'' என்றார். எட்டு வயதில் இருந்து குடித்து வந்த, பழனி, குடிகாரர்களை கண்டாலே வெறுப்பு வருகிறது என்கிறார்.இப்படி ஒவ்வொருவராக திருந்தி, இங்கு குடி என்ற வார்த்தையைக் கூட கேட்க முடிவதில்லை. கடைகளில் பீடி, சிகரெட் விற்பனையும் இல்லை.

சாதிக்கும் மாணவர்கள்:இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜருகு ஊராட்சியைச் சுற்றி உள்ள, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், இங்கு பயிற்சி எடுத்து செல்கின்றனர்.சென்ற முறை பிளஸ் 2 வகுப்பில் 68 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த முறை 78 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 

யோகா பயிற்சியின் மூலம் படிப்பில் முன்னேற்றம் கண்ட மாணவர், பிரபாகரன் கூறுகையில், ""காலை நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்த பின்னர் படிப்பதால் மனதில் பசுமரத்தாணி போல பதிகிறது. அதிகாலையில் எழுவதால், படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதுவே இம்முறை நான் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு காரணம்,'' என்றார்.

குற்ற செயல்கள்:கிராமங்களும், தெரு சண்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் இங்கு ஊரே அமைதிப் பூங்காவாக இருக்கிறது.ஆரம்பத்தில் யோகா பயிற்சி பெற்று, தற்போது, யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கும், ஸ்ரீதேவி கூறுகையில், ""கிராமத்தில் உள்ள அனைவரும் யோகா செய்வதன் மூலம் எங்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை வந்து விட்டது. இப்பயிற்சி கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பிரச்னை ஏற்படுவதில்லை. குறிப்பாக குழாயடியிலோ, தெரு முனையிலோ சண்டை போடுவதில்லை,'' என்றார். 

மேலும், ""உங்க மண் வெட்டியையோ, கடப்பாரையையோ இங்கே விட்டு செல்லுங்கள். நாளை அதே இடத்தில் இல்லை என்றால் நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என, ஊரில் தனிநபர் ஒழுக்கம் பற்றி பெருமையாக சவால் விடுத்தார்.

அடிப்படையிலேயே மக்கள் ஒழுக்கமாக இருப்பதால், பெரும்பாலான குற்றச்செயல்கள் நிகழ்வதில்லை என்கின்றனர், இந்த ஊர் மக்கள். நன்றி:தினமலர்,4.6.12