வளமான வாழ்க்கையை அமைக்க உதவும் (தம்பதிகளுக்கான) ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு
தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் சித்தர்களின் வழித்தோன்றல்களே! இருப்பினும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் தொகையில் வெறும் 10% பேர்களே சகல வசதிகளோடும்,சிறு குறைகூட இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்;மீதி 90% பேர்கள் பல கோவில்களுக்கு வழிபடச் சென்றாலும்,அவரவர் ஜாதகப்படி செய்ய வேண்டிய பரிகாரங்களை முறையாகச் செய்தாலும்கூட அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை;
அதே சமயம்,நம்மைச் சுற்றியிருப்பவர்களில் பலர் சாதாரண நிலையில் இருந்து எந்த வித உதவியும் இல்லாமலும்,யாருடைய சப்போர்ட் இல்லாமலும் ஒரே தலைமுறையில் கிடுகிடு வென வளர்ந்துவிடுகின்றனர்;இதற்கான காரணங்கள் அவர்களுக்கே தெரியாது.அந்த காரணங்களை அறியவும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்;
இந்த சூழ்நிலையில் யாருக்குமே தீங்கு தராமலும்,நியாயமாக வாழ்ந்தும் கூட எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கையில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படுவதில்லை? என பல ஆண்டுகளாக மனம் வருந்தியிருக்கிறீர்களா?
என் மகன்/மகள் திருமணம் நடைபெறாமலே போவது ஏன்?
எனது பூர்வீகச் சொத்துக்கள் பிரச்னை தீராமலேயே இருக்கிறதே.ஏன்?
எங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை எப்போது பார்ப்போம்?
இந்த அபூர்வமான பிரச்னை தீர எங்கெங்கோ சென்று எவ்வளவோ செலவழித்தும் கூட,பிரச்னை நீங்க வில்லையே? இதுதான் இந்த ஜன்மத்து விதியா?
எங்கள் குடும்பத்து ரத்த உறவுகள் மணமான பின்னர்,ஒற்றுமையின்றி சிதறிப்போய்விட்டனரே!மீண்டும் ஒன்று சேருவார்களா?
எங்கள் மகன்/ளுக்கு மணமாகி இத்தனை ஆண்டுகளாகிய பின்னரும்,குழந்தை பாக்கியம் இல்லையே! ஏன்?
ஜோதிடப்படி,எங்கள் ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளை சரியாக கணித்துச் சொல்கிறார்கள்.ஆனால்,அந்த பிரச்னைகள் தீர எப்படி ஆத்மபலத்தை அதிகரித்து,பிரச்னைகளைத் தீர்க்க வழி சொல்வதில்லை;சொன்னாலும் ஏன் எங்கள் பிரச்னைகள் தீர்வதில்லை!
இதுபோன்ற சிந்தனை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் எனில்,நீங்கள் தான் இந்த ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தகுதி வாய்ந்தவர்.
முடிந்தவரையிலும் தம்பதியாக கலந்து கொள்வது அவசியம்;மணமாகாமல் இருப்பவர்களும்,வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி வகுப்பில் கூறப்படும் விஷயங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது;நீங்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபின்னர்,உங்களின் ரத்த உறவுகளுக்கு மட்டுமே போதிக்கலாம்;வேறு எவரிடமும் பகிர்ந்துகொண்டால்,குரு துரோகத்திற்கு ஆளாவீர்கள்.
இந்த பயிற்சி வகுப்பினை நடத்தித்தர நமது ஆன்மீககுரு ,ஆன்மீகத் தென்றல் திரு.சிவமாரியப்பன் அவர்கள் சம்மதித்துள்ளார்கள்.ஜீன் மாதம் கடைசி வாரத்தில் இந்த வகுப்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற இருக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் 21.6.2012க்குள் தங்களின் பிறந்த ஜாதகம்,போட்டோ,பிறந்த ஊர்,தற்போது வசிக்கும் ஊர், aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்;பிறந்த ஜாதகம் இல்லாதவர்கள் போட்டோவை அனுப்பி வைக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி நடைபெறும் தேதி,இடம்,குருதட்சிணை போன்றவை தனிப்பட்டுத் தெரிவிக்கப்படும்.தகுதியானவர்களை நமது தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
அனுப்பப்படும் மின் அஞ்சலில் subject இல் ஆத்மபலம் வகுப்பு என்பதை தமிழில்/ஆங்கிலத்தில்/தங்கிலீஷில் குறிப்பிட்டு அனுப்பவும்.
தெய்வீக விபூதி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள்,தங்கள் பெயரை முன்பதிவு செய்தாலே போதுமானது;அவர்கள் விபூதி மாணவன் என்று mail subject இல் டைப் செய்து அனுப்பினால் போதுமானது. கோயம்புத்தூரில் நடைபெற்ற இரண்டாவது தெய்வீக விபூதி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளும் இதே போல முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
ஓம்சிவசிவஓம்


